சிறிலங்காவில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

253 0

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையானது 1980 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக 29 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 29 பேரும் மும்பையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.