முருகனைச் சந்தித்துப் பேசுவதற்கு நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன்?

207 0

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனக் கேள்வி எழுப்பியது சென்னை உயர் நீதிமன்றம். இந்தக் கேள்விக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச அனுமதி உண்டு. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறையில் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறையில் முருகன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்துப் பேச அனுமதி வழங்கக் கோரியும் நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் இவ்வாறு கேள்விஎழுப்பியது.