மரக்கடத்தல் – நால்வர் கைது!

317 0

மட்டக்களப்பு – வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மரங்களை கடத்திய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், சிறிய உழவு இயந்திரம் மற்றும் மரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

ரிதிதென்னை பகுதியில் தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைதாகினர்.

அத்தோடு இவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட ஆறு சுரியமாரை மரம், ஐந்து தேக்கு மரம் மற்றும் இரண்டு சரியமாரை மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டுவதற்கு பயன்படும் இயந்திர வால் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. மேலுமொரு பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டனர்.