சிறிலங்காவில் டிரோன் கெமரா மூலம் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா சேனைகள்

244 0

சிறிலங்காவில் டிரோன் கெமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும் வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர்.

நேற்று (16) அதிகாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில அடர்ந்த காட்டுப் பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் இரு கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டன.

குறித்த சுற்றி வளைப்பினை மொனராகலை, அம்பாறை, பண்டாரவளை மதுவரி திணைக்களத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட குழு ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த பாரிய அளவிலான கஞ்சா சேனை டிரோன் கெமரா உதவியுடன் கண்காணிப்பு செய்யப்பட்டு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அருகில் இருந்த இரு வேறு இடங்களில் இருந்த மற்றைய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதுடன் தப்பி சென்றவர்களால் பயிரிப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கஞ்சா செடிகள் பிடுங்கப்பட்டு தீ இட்டு அழிக்கப்பட்டது.

சுமார் 2 ஏக்கருக்கு அதிகமான ஐந்து கஞ்சா சேனைகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.