சிறிலங்காவில் வெலிமட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பில்லகடே, மல்பொத்த பகுதியில் கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மல்பொத்த, மீரகஹவத்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கிணற்றில் விழுந்த நபரை பிரதேசவாசிகள் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.