கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் அனுமதிப்பத்திரம் இரத்து

259 0

கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் மணல் நில உரிமையாளர்களுக்கான சுரங்க அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும் என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிவித்துள்ளது.

பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதுதொடர்பாக அறிக்கை ஒன்ரை விடுத்துள்ளார்.

அனுமதிபத்திரம் பெற்ற மணல் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட கட்டணத்திலும் பார்க்க கூடுதலான விலைக்கு மணலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்