வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லை-கருணாசேன ஹெட்டியாராய்ச்சி

325 0

harunasena-heddiyarachchiவடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி தெரிவித்தார்.

ஆவா குழு தொடர்பில் மக்கள் மத்தியில் சிலர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஓய்வூ பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருந்தார்.

வடக்கில் அவ்வாறு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டிற்குள் மீண்டும் குழப்ப நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வூ பெய்ய மேஜர் ஜெனரலின் கருத்து தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்;.

ஆவா குழு என்பது பாதாள உலக கோஷ்டி எனவும், பாதாள உலக கோஷ்டியினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விடுக்க முடியாது எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி குறிப்பிட்டுள்ளார்.