சென்னை கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட் கட்டணத்தை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் ரெயில் சேவைகள் ஜூன் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் எப்போது கையில் கிடைக்கும் என்று பயணிகள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

