பேத்தாழை வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

255 0

வாழைச்சேனை பாசிக்குடா பிரதான வீதி பேத்தாழையில் நேற்று (03)மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியை சேர்ந்த முஹம்மது நாசர் முகம்மது நைறூஸ் (வயது 18) என்ற இளைஞனே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து பாசிக்குடாவிற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது எதிரே சென்ற சிறிய கென்ரர் ரக வாகனம் சடுதியாக வீதியை விட்டு மறு பக்கம் செல்ல முற்படுகையில் பின்னால் சென்றவர் தமது வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் கென்ரர் வாகனத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் கல்குடா பொலிசார் விசாரணைகளை மெற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் கென்ரர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் கென்ரர் வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த இளைஞரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பாரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.