தேர்தல் நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

327 0

தேர்தல் ஆணைக்குழு இன்று (03) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

தேர்தல் நடத்துவதற்கான  திகதியை தீர்மானிப்பது குறித்து இன்றைய தினம் முடிவு செய்யப்படவுள்ளது.

உயர்நீதிமன்றம் நேற்று (02) வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதுடன், தேர்தல் திகதி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

இக்கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழுவின்  தவிசாளர்  மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.