நளினியின் சுயசரிதை வெளியாக உள்ளது

303 0

nalini_2749628fமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்ப்பட்டு கடந்த 25 வருடங்களாக சிறையில் உள்ள நளினியின் வாழ்க்கை வரலாறு சுயசரிதையாக வெளியிடப்படவுள்ளது.

500 பக்கங்களை கொண்டுள்ள இவரின் வாழ்க்கை வரலாற்று நூல், எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்பு கொண்ட முருகன் என்பவரை நளிளி, 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி திருமணம் செய்தார்.

இருப்பினும் பெரம்பத்தூரில் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி கொலை செய்யப்பட்டதை அடுத்து நளினி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட போது அவர் கர்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில் வேலுரில் உள்ள சிறையில் ஆயுள் கைதியான அவர் சிறையடைக்கப்பட்டார்.

அதன்படி, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மேலும் ஆறு பேருடன் அவர் சிறைவாசம் இருந்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.