முறிப்பில் 175 தென்னம்பிள்ளைகளை என்ணையூற்றி அழித்த விசமிகள்

334 0

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிசிற்கு உட்பட்ட முறிப்பு கிராமத்தில் வான் பயிரான தென்னம்பிள்ளை செய்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் 175 தென்னம் பிள்ளைகளும் மண்ணெண்ணைய் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளதாக காணி உரிமையாளரினால் முள்ளியவளை காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பம்வ தொடர்பில் காணி உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்.

மூன்று ஏக்கரில் வான்பயிரான தென்னம் செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மூன்று ஆண்டுகளை கொண்ட பிள்ளைகளாக வளர்ந்து வந்த நிலையில் நேற்று  முன்தினம் (25) இரவு விசமிகள் யாரோ குறித்த தென்னம்பிள்ளைகள் அனைத்;திற்கும் மண்ணெண்யெ; ஊற்றிவிட்டு சென்றுள்ளார்கள்.

யாருடனும் பகையோ அல்லது எதிர்ப்போ இல்லாத நிலையில் எனது வாழ்வாதாரத்தினை விசமிகள் அழித்து விட்டார்கள் என்றும் இது தொடர்பில் முள்ளியவளை காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுளதாகவும் காணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்

முள்ளியவளை காவல் துறையினர்   நேரில் சென்று வாக்குமூலம் எடுத்து விசாரணைகளை தொடங்கியள்ளார்கள்.