ராஜிதவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உத்தரவு

281 0

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜித சேனாரட்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.

சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்னவின் பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.