யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் நேர அட்டவணையில் மாற்றம்

259 0

npc_logo_ori-12017ம் வருடம் ஜனவரி இரண்டாம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள பாடசலைகளின் நேர அட்டவணையில் மாற்றம்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி 2.௦௦ மணிக்கு நிறைவடையும் பாடசாலைகள், 7.30 மணிக்கு ஆரம்பமாகி 1.3௦ மணிக்கு நிறைவடையும் எனவும் வடமாகாண கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வடமாகாணத்தில் உள்ள அணைத்து பாடசாலைகளும் ஒரே நேரத்தில் ஆரம்பகவேண்டும் என்று கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, வட மாகாணத்தில் இயங்கும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகள் அனைத்தும் 2017.01.02 முதல் காலை 07.30 மணி தொடக்கம் பிற்பகல் 01.30 மணி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.