வடக்கு ஆளுநராக முன்னாள் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?

357 0

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அந்த பதவியில் உள்ள திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார் என்றும், தேர்தலின் பின்னர் அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அண்மையில் திருமதி சாள்ஸ் தனக்கு மூன்று மாத ஓய்வு வேண்டும் என்று கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.