வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதை தொடர்வதா?

318 0

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடைமுறையை தொடர்வதா என அரசாங்கம் ஆராயவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார்.வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதை எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கம் ஆராயவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்துவருவதற்கான விமானங்களை ஒழுங்குபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அழைத்துவரப்படுபவர்களை கண்காணிப்பதற்கான கால அவகாசம் அதிகாரிகளிற்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குவைத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 49 இலங்கையர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.