சிறிலங்காவில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் சம்பளத்தை இழந்துள்ள வேட்பாளர்களாக களமிறங்கிய அரச உத்தியோகத்தர்கள்

316 0

சிறிலங்காவில் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள், சுயேட்சைக்குழுகளில் வேட்பாளர்களாக களமிறங்கி வேட்புமனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பலர் இன்று தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு வருவதால் தமது சம்பளங்களை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர் .

கொரோனா தொற்று காரணமாக தேர்தல் இடம்பெறும் திகதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட கடந்த பங்குனி மாதம் 19 ஆம் திகதியில் இருந்து அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி வேலை செய்யும் விடுமுறையினைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள் தற்போது தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படாத காரணத்தினால் தமது வேலைகளை தொடர் முடியாமலும் சம்பளம் பெற்றுக்கொள்ள முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் களமிறங்கும் அரச ஊழியர் ஒருவர் வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும்போது சம்பளம் இன்றி வேலை செய்யும் விடுமுறையினை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட முடியும் இவ்வாறு 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது பல அரச ஊழியர்கள் தேர்தலில் கட்சிகளிலும் சுயேட்டைக் குழுக்களிலும் களமிறங்க வேட்பு மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர் .

எனினும் தேர்தல் இடம்பெறும் திகதி அறிவிக்கப்படாமையால் தேர்தல் இடம்பெறும் திகதிகளில் மாற்றும் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் விடுமுறைகளும் காலவரையின்றி தொடர்ந்து செல்வதுடன் அவர்கள் தமது சம்பளத்தையும் இழந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர் .