11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

357 0

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் அறுவர் உள்ளிட்ட 11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அத்தியாவசிய சேவை கருதி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய குற்ற புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஏ.ஆர்.பீ.ஜே.அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்ற புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ.திலகரத்ன அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டி.ஜி.என்.டபிள்யூ.டி.தல்துவ நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர் இதற்கு முன்னர் கடமையாற்றிய மேல் மாகாண புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பதவிக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி எச்.பீ.ஏ.புஸ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கே.ஜி.எல்.கீதால் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் நுகேகொட பகுதிக்கு பொறுப்பானவராக கடமையாற்றினார்.

அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ.எச்.பி.அஜித் ஹெசிறி பொலிஸ் கல்லூரியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் இரண்டு உதவி பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.