ஆர்எஸ் பாரதி கைதுக்கு வரவேற்பு தெரிவித்த எச் ராஜா

268 0

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு பாரதிய ஜனதா செயலாளர் எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:-
எச்.ராஜா ட்விட்டர் பதிவு

“திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?.” என தெரிவித்துள்ளார்.