அம்பாறையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள்

252 0

அம்பாறை – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

பிரவச வலி என தெரிவித்து, 28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (21) குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், திருக்கோவில், அக்கரைப்பற்று வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தற்போது குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.