சமூகத்திலிருந்து தொற்றாளர்கள் எவரும் கடந்த 18 நாள்களில் இல்லை

295 0

கடந்த 18 நாள்களில் சமூகத்தில் இருந்து ஒரு கொரோனா தொற்றாளர் கூட பதிவாகவில்லை எனத் தெரிவித்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, 3 வாரங்களாக சமூகத்திலிருந்து தொற்றாளர் பதிவாகாமை இலங்கையர் என்ற ரீதியில் ஓரளவு மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தார்.

மேலும் இதுவரை 584 தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதுடன், 434 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர், முதியவர்கள் என, 797,635 பேருக்கு மே மாதகொடுப்பனவாக 3,988 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.