இலங்கையில் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியது அமெரிக்கா

347 0

இலங்கையில் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமெரிக்க அது நீண்டகால ஸ்திரதன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசியவிவகாரங்களிற்கான பணியகத்தின் முதன்மை துணை உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ள அலைஸ் வெல்ஸ் இந்தோ பசுவிக்கில் இலங்கை அமெரிக்காவின் முக்கிய சகா என தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையிலான உறவின் பலம் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் வெளிப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகளிற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியதுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் மீள்உருவாக்கம் ஆகியவற்றிற்கும் ஆதரவு வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் நீதி பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மனித உரிமைகள் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.