சிறிலங்கா ஜனாதிபதியின் அணுகுமுறை நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் – ஐ.தே.க. எச்சரிக்கை

319 0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்தா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தா இலங்கையை ஜனாதிபதி நீக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு ஜனாதிபதியின் அணுகு முறைகள் நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் எனவும் ஐ.தே.க உறுப்பினர் வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் , உலக சுகாதார அமைப்பு , ஐ.நா மனித உரிமைகள் பேரவை , ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அமைப்பிடனுனான உறுப்புரிமையை சிறிலங்கா ஜனாதிபதி நீக்கிக்கொள்ள போகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.