சிறிலங்காவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

247 0

சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு இது பொருத்தமான நேரம் இல்லை என தெரிவித்துள்ளார்.