கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

260 0

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (19) இரவு 11.20 அளவில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த 25 வயதான இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் செங்கலடி பகுதில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகறாரே கொலைக்கான காரணமாகும்.

கொலையை புரிந்தவர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை தேடி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.