சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது

271 0

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று(புதன்கிழமை) காலை 6 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.