சிறிலங்காவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

258 0

சிறிலங்காவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்பாசன திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், இரத்தினபுரி மற்றும் மில்லகந்த ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் நோர்வூட் மற்றும் ஹொலம்புவ ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.