விக்கினேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் கூட்டணியின் சுமார் பத்துப் பேர் வெவ்வேறு வாகனங்களில் அங்கு சென்றுகொண்டிருந்தபோது இன்று காலை 6.30 மணியளவில் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்க வைக்கப்பட்ட பின்னர், “மேலிடத்து உத்தரவு” எனத் தெரிவித்த சோதனைச் சாவடிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி, “எக்காரணம் கொண்டும் முள்ளிவாய்க்கால் செல்ல அனுமதிக்க முடியாது” என அவர்களைத் திருப்பினுப்பியுள்ளதாக சற்று முன்னர் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.