மே 17ம் நாள் முள்ளிவாய்க்கால்!

344 0

மே 17ம் நாள் முள்ளிவாய்க்கால்!
*******
ஒடுக்குமுறை கண்டுமுழங்கிய ஒற்றைத் துப்பாக்கி….
தொடுத்த எதிப்போர் தொடர் அலையாகி…
வடக்குக் கிழக்கெங்கும் இடங்கள் வசமாக்கி….
முப்படைப் பலங்கொண்டு முழுமையுங் கண்டபலம்!

தமிழனின் நிமிர்வுக்கு தலையாகி நின்றபலம்…
தமிழீழ விடிவிற்கு உதயமாய் வந்தபலம்…
மெளனமாக போகின்ற நிலைதனைக் கண்டுபலர்
மனம்விட்டு அழ இயலா மேலான சோகத்தில்!

முத்தமிழின் முடியாக இத்தகைமை ஆகுமென..
மெத்த மகிழ்வோடு தமிழ்த்தாயும் தவமிருக்க..
கற்பனைக் கெட்டாத கோரத்தின் அழிவோடு
இத்துயர் வருமென்று எண்ணியு மிருப்பரோ!

வேதனையின் உச்சத்தில் ஏற்காத மனங்கொண்டு

மே 17ம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவோடு.

-வன்னியூர் குரூஸ்-