மே 15ம் நாளில் முள்ளிவாய்க்கால்!

285 0

மே 15ம் நாளில் முள்ளிவாய்க்கால்!
*******
அன்றைய புலிவேகம் இன்றும்புது வீரியமாய்
நின்று போராடும்… நெஞ்சுரம் அதுகொண்டு
உலகின் கரங்களை ஓங்கி எதிர்த்து….
ஒம்பற்ற வீரத்தின் முத்திரை பதிகிறது!

பரப்பால் பரந்திருந்த பெருநிலத்துத் தமிழீழம்
இருக்க இடமற்ற சிறுதுண்டாய்ச் சுருங்கிட
பறப்பின் பாடாய் அலைந்த பலரங்கே….
நெருப்பாய் கொட்டும் எரிகுண்டால் கருகினர்!

எறிகுண்டு தொடராய் எங்கும் வெடிக்கத்
தெறிகெட்டோடித்
திசைகள் மாறி…
இருளைப் பகலாய் ஆக்கும் வழியில்
இடர்பட் டெமனின் வலைக்குள் போயினர்!

எவர் நிலை என்னவோ!!

மே 15ம் நாளில் முள்ளிவாய்க்கால்.

-வன்னியூர் குரூஸ்-