ரோஹிதவின் வெளிநாட்டுத் தடை – தற்காலிகமாக நீக்கம்

239 0

rohitha_abeygunawardenaநாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு செல்வதற்கான தடை தற்காலிகமாக விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று வழங்கியது.

ஜப்பானில் இடம்பெறவுள்ள மத மற்றும் கலாச்சார நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முன்னதாக மனுவொன்றின் மூலம் நீதிமன்றத்தை கோரியிருந்தார்.

இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தனவிற்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.