மே பத்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்ககால்!

467 0

மே பத்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்ககால்!
*******

நிரந்தர நல் அமைதியென்று அயர்ந்துறங்கி
இரவு பலதைக் கனவால் நிறைத்த மக்கள்….
இரக்கமற்ற அரக்கரின் இராட்சிய வதைப்பிலே
துயரத்தில் உழன்று தம் உறக்கம் மறந்தனரே!

அழகின் மனைகட்டி மகிழ்வோடு வாழ்ந்த மக்கள்…
அழிவில் உயிர்காக்க வழிகள் ஏதுமின்றி
மண்ணில் குழிதோண்டி மறையும் பூச்சிபோல்
தம்மைத் தாம்மூடித் தவித்தார்கள் ஆங்கே!

இரத்த வெறிகொண்ட இராணுக் கும்பல்கள்
யுத்தக் களத்திலே எதிரியைக் கொல்வதாய்
மெத்தப் பலங்கொண்டு மக்களைக் கொன்றுமே
மொத்த நிலத்தையும் பிணமாக மாற்றினர்.

இதை யார் கண்டார்? யார் கேட்டார்?

இது மே பத்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்ககால்.

-வன்னியூர் குரூஸ்-