கிழக்கில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி – முதலமைச்சர் குற்றச்சாட்டு

269 0

12056கிழக்கில்  பாரிய   இனப் பிரச்சினையொன்றை  ஏற்படுத்துவதற்கான  முயற்சிகள்  சிலரால்  திட்டமிட்ட  வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்தார்.

இந்த சதிகாரர்களுக்கு  கிழக்கில் உள்ள சில  அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்குவது தற்போது வெளிப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஒரு சில நடவடிக்கைகள் காரணமாக இனங்களிடையே மோதலை ஏற்படுத்தும் சதி திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரியுள்ளார்.