மே எட்டாம் நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்!

458 0

மே எட்டாம் நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்!
*******
நான்கு திசையிலும் நாட்டிவைத்த பீரங்கி
ஏவும் குண்டுகளோ இடமெல்லாம் வீழ்ந்திட…
மாண்டு போனதங்கே மனிதத்தில் தமிழ்ச்சாதி..!
வேண்டும் இதுவென்றா வேடிக்கை பார்த்தார்கள்!

வாழ்வைத் தொடங்கமுன் வாலிபக் குஞ்சுகள்
வீழ்ந்து கிடந்ததெல்லாம் வேதனையின் உச்சங்கள்…
சோர்வைத் தருகின்ற சாவான காட்சிகள்
சூழ்ந்து கிடப்பதெல்லாம் சூட்சிகளின் எச்சங்கள்!

வானமே இறங்கிவா வந்தெமை மூடென்று
தாயொருத்தி அழுதாளே ஐயகோ அதுகோலம்…!
நீதியே எழுந்துவா நிம்மதி தாவென்று
நெடுநேரம் அழுதாழே ஐயகோ அதுகோரம்!

யார் கண்டார்? யார் கேட்டார்?

அது மே எட்டாம் நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்.

-வன்னியூர் குரூஸ்-