சிறிலங்காவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு!

299 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும்  17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இதுவரை 232 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன்,  இதுவரை 797 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.