மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டி களுவாஞ்சிகுடியில் கண்டனப் பேரணி

452 0

indexமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் வைத்திய செயற்பாடுகளின் போது பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று களுவாஞ்சிகுடியில் முன்னெடுக்கப்பட்டது.

பொது மக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனஈர்பு போராட்டமானது பட்டிருப்பு தேசியபாடசாலை களுவாஞ்சிகுடியில் இருந்து ஆரம்பமாகி பஸ்தரிப்பு நிலையம் வரை சென்று முடிவடைந்தது

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயின்று வந்த 7 வயது மேகநாதன் மோகவர்மன் எனும் மாணவன் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15.05.2016 திகதி மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவ் உயிரிழப்புக்கு வைத்தியர்களின் கவனக்குறைவே காரணம் எனக் கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment