சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரிப்பு

302 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.