சிறிலங்காவில் கொரோனாவினால் 09 ஆவது மரணம் பதிவாகியது

336 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 ஆவது நோயாளியும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு 15-ஐ சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.