உலகை வெல்லும் தமிழர் ஆயுதமே முள்ளிவாய்க்கால்.

413 0

உலகை வெல்லும்
தமிழர் ஆயுதமே
முள்ளிவாய்க்கால்.
*******

உலக வெளியரங்கினில்
உண்மை முகம் உறங்கிட
பனிகள் விலகாத
பாதை தெரியாத
ஓலம் விலகாத
ஒர் இனம்
ஈழத்தமிழினம்…!

மூலை முடுக்கெல்லாம்
உலகப் பரப்பெல்லாம்
விடுதலைச் செருக்கோடு
பிரபாகரன் எனும் பெயர்
சொல்லும் தமிழினம்
இன்று பிணமாக இருப்பது
ஏன்…?

முள்ளிவாக்காலை
விழுங்க முடியாத பேரினவாத்தை
எள்ளி நகையாடி
எதிர்த்துப் போராடி வெல்லமுடியாது
விம்மி ஆழுகின்ற நிலை
வந்தது ஏன்…?

அள்ள முடியாத
அளக்க முடியாத
கொள்கை விலகாத
துன்பம் கரையாத
முள்ளிவாக்காலை
முடிவுகட்டாது
போனது ஏன்…?

உரிமைப் போரென்று
போன உயிர்கள் எமக்கென்று
சுயத்தை மறந்திட்டு
ஒன்று சேராத
ஒற்றுமை திரளாத
நிர்க்கதி நிலை
உருவாகக் காரணம்
யார்…?

சதைப் பிணத்தின்
நடுவில் நகர்கின்ற
இரத்தம் உறைகின்ற
சித்தம் உணர்கின்ற
சிறு நெருப்பாகி
உச்சம் தொடவில்லை
போன்று…!

உணர்வுப் பெருக்கோடு
உரிமைப் பாங்காக
எழிமை கொள்கின்ற
இணைவு உருவாக
அருமை புரிகின்ற
செயலை உருவாக்க
தேடி அழைகின்றதேனோ..!
தமிழன் செத்து பிணமான
முள்ளிவாக்காலை மறந்துபோகாத
திட்டம் உருவாக்க எட்ட நிற்பது யாரோ…!

எம் இனத்தின்
புரியாத புதிரோ…!
வட்டம் போட்டாலே எட்டிக்கடக்காத
உயிரோ…!
எம் இனத்தை
வளர்க்கின்ற பயிரோ.

நிலைமாறு காலத்தை
உணருதல்
தமிழர் கடமை….!
முள்ளிவாய்க்காலை
கூர்மை மிகு
ஆயுதமாய் ஏந்தி…
பூகோளத்தை
வெல்லுதலே வரலாறு.

– ஈழத்து சுந்தர்-