மே ஐந்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!

483 0

மே ஐந்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!
********
பல லட்சம் பேர்கொண்ட சிற்ரூரின் திடலிலே…
அறுபட்ட காயங்கள் ஆற்றிட மருந்தில்லை…!

அரை லட்சம் பேர்தாண்டி இறந்திட்ட போதிலும்…
அதுகண்டு காத்திட யாருக்கும் மனமில்லை…!

மக்கள் சேவையின் பருத்துவப் பிரிவுக்கோ
மரத்தடி நிழல்கூட மருத்துவ மனையாச்சு…!

தைக்கும் நூலுக்கும் வருகிறது தட்டுப்பாடு..
அயரவைக்க மருந்தில்லா அறுவைச் சிகிச்சைகள்…! பாவம்!!

அங்கங்கள் அறுபட்டு ஆங்காங்கே கிடக்கும்
சொந்தங்கள் உயிர்காக்கும் சேவையில் இருந்த…

கடல்வழிப் பயணத்துச் சிறு கப்பலை அப்பப்போ
இடைமறிக்கும் வேலையை எறிகணைகள் செய்தனவே…!

யார் கண்டார்? யார் கேட்டார்? இது முள்ளிவாய்க்காலில்
மே மாதம்
ஐந்தாம் நாள்.

-வன்னியூர் குரூஸ்-