பொள்ளாச்சி கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர்

300 0

201611161835116622_maoist-appear-court-pollachi_secvpfமாவோயிஸ்டுகள் 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பொள்ளாச்சி கோர்ட்டுக்கு இன்று அழைத்துச் சென்றனர்.

கோவையில் கடந்த ஆண்டு கைதான மாவோயிஸ்டுகள் ரூபேஸ், சைனி, அனுப்மேத்தியூ சார்ஜ் ஆகிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போலி முகவரி கொடுத்து சிம்கார்டு பெற்றதாக இவர்கள் மீது பொள்ளாச்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜர்படுத்த கோவை சிறையில் இருந்து 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பொள்ளாச்சி கோர்ட்டுக்கு இன்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்கள் நீதிபதி ஹரிஹரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக கோர்டுக்கு வந்த ரூபேஸ் மாவோயிஸ்டுகள் தேச பக்தர்கள் என்று கோ‌ஷமிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.