சிறிலங்காவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை !

267 0

சிறிலங்காவின் வென்னப்புவ-வயிக்கால பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட குரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறே குறித்த சம்பவத்திற்கு காரணமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.