சிறிலங்காவில் மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்.!

350 0

சிறிலங்காவில்  மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது கொரோனா நோயாளிகளாக 588 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 317 பேர் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.