தென் தமிழீழத்திலிருந்து மலையக மக்களுக்கு உதவி!

346 0

மலையக பிரதேசமான இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஹப்புகஸ்தென்ன பகுதியில் வாழும் 85 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஹப்புகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த மக்களின் பட்டினித்துயரத்தினை நேரிலே கண்கூடாக அறிந்த வாழைச்சேனையை சேர்ந்த அருட்தந்தை நேசராஜா சபிலாஸ் இம்மக்களுக்கு உதவ வேண்டும் எனும் சிந்தனையால் தனது பாடசாலையான வாழைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவ நண்பர்களை தொடர்பு கொண்டு உதவி கோரியதற்கமைய, வாழைச்சேனை தேசிய பாடசாலையின் 2005ம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 2008 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் முன்வந்து தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.

இவ் உதவியின் மூலம் அருட்தந்தை நே.சபிலாஸ் சுமார் 85 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளதுடன், மேலும் தனது பாடசாலை நண்பர்களின் உதவியோடு மேற்படி சேவையினை தொடரும் செயற்பாட்டினை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.