சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரிப்பு

382 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிறிலங்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 337ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர் என்றும் இதுவரை 107 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.