குர்திஸ் படையினரிடம் சரணடைந்த ஐ.எஸ் தீவிரவாதி(காணொளி)

344 0

 

kurdish-militia-kirkukசிரியாவில் வேகமாக தமது கட்டுப்பாட்டு பகுதிகளை இழந்துவரும் ஐ.எஸ் அமைப்பினர் மிகுந்த பலவீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே குர்திஷ் படைகள் கைப்பற்றிய ஒரு கட்டிடத்தில் இருந்து ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் சரணடையும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த காணொளியில் குர்திஷ் படைகளால் ஒரு கட்டிடம் சுற்றி வளைக்கப்பட்டதுடன், அங்கிருந்து தீவிரவாதிகளை வெளியே வருமாறு குர்திஷ் படைகள் அழைப்பதுடன் ‘ வெளியே வாருங்கள் நாங்கள் சுட மாட்டோம், உங்கள் நண்பர்கள் இருவர் எங்களுடன் இருக்கிறன்றர் என்று அழைக்கின்றனர். சில நொடிகளில் ஒரு தீவிரவாதி வெளியே வருவதும் அவரிடம் குர்திஷ் படைகள் விசாரிப்பதும் பதிவாகி உள்ளது ‘

தொடர்ச்சியாக ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக போர் நடந்துவரும் நிலையில் கைதாகும் அவ்வமைப்பினரை சேர்ந்தவர்களை கூட்டுப்படைகள் கொடூரமாக துன்புறுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.