வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு!

482 0

வவுனியாவில் கடந்தவாரம் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்திருந்ததுடன், 47 குடும்பங்களை சேர்ந்த 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த அனர்த்தம் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 44 வீடுகளும், செட்டிகுளம் பிரிவில் 3 வீடுகளும், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் 7 வீடுகளும் என 54 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்த நிலையில் அவற்றின் புனரமைப்பிற்காக அனர்த்தமுகாமைத்துவ அமைச்சினால் வவுனியா மாவட்டசெயலகமூடாக 4 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி அந்தந்த பிரதேச செயலகமூடாக பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.