சிறிலங்காவில் வீசிய கடும் காற்றினால் 245 வீடுகள் சேதம்!

440 0

சிறிலங்காவின் புத்தளத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.

கருவலகஸ்வெல, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு, புத்தளம் மற்றும் மஹகும்புக்கடவல ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.