19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

463 0

அதிக அவதானமிக்க வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய 19 மாவட்டங்களில்  அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இன்று(16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதுடன், பி.ப 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு 20 ஆம் திகதி காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் எனவும், 20ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.