19.4.2020 அன்னை பூபதியின் நினைவு தினத்தில் இல்லங்களுக்குள் சுடரேற்றி வணங்குவோம்.

744 0

அன்பான தமிழீழ மக்களே….

உலகப் பேரிடராக மாறியிருக்கும் இக்காலச் சூழலில் தமிழீழ தேசவிடுதலைக்காய் தம் இன்னுயிர் ஈந்தவர்களை நெஞ்சிலே நிறுத்திக் கொள்வோம். நாட்டுப்பற்றாளர் தினமான 19 ஏப்ரல் ஞாயிறு தமிழீழத்தாய் அன்னை பூபதி அவர்களின் 32 ஆவது ஆண்டில் நினைவேந்தி ஒவ்வொரு தமிழர் இல்லங்களிலும் மாலை 20.00 மணிக்கு ஈகைச் சுடரேற்றி தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், தமிழ்மக்களுக்கும், நாட்டுப்பாற்றாளர்களுக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

மாவீரர் பணிமனை யேர்மனி.